“ஆதிதிராவிடர் நலத்துறையில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை” - இபிஎஸ்ஸுக்கு அமைச்சர் பதில்

7 months ago 33

சென்னை: ஆதிதிராவிடர் நலத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்களில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்றும், மத்திய அரசின் நிதி முழுமையாக பயன்படுத்தப்பட்டது என்றும் எதிர்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டுக்கு அத்துறையின் அமைச்சர் மா.மதிவேந்தன் பதில் அளித்துள்ளார்.

ஆதிதிராவிடர் நலத்துறையில் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான கே.பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகத்தில் (தாட்கோ) மேலாளர் பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் காலியாகவுள்ளன.

Read Entire Article