அரியலூர், ஜன. 25: அரியலூரில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை கிளையில், ஓட்டுனர்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. குடந்தை கோட்ட மேலாண் இயக்குநர் பொன்முடி உத்தரவின் படி, திருச்சி மண்டல பொது மேலாளர் முத்துகிருஷ்னன் அறிவுறுத்தலின்படி, கோட்ட மேலாளர் புகழேந்திராஜ், மற்றும் கிளை மேலாளர் குணசேகரன் தலைமையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு ஓட்டுனர் தினம் கொண்டாடப்பட்டது.
பேருந்துகள் புறப்படும் முன்பாக ஓட்டுனர்களுக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து, இனிப்பு வழங்கி, ஓட்டுநர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்து டிரைவர்கள் கவுரவிக்கப்பட்டனர். மேலும் நடத்துனர்களுக்கு பேனா வழங்கி வாழ்த்துக்களைத் கிளை மேலாளர் தெரிவித்தார். இதில் அலுவலர்கள்,தொழில் நுட்ப உதவியாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post அரியலூர் அரசு பணிமனையில் ஓட்டுனர் தினம் appeared first on Dinakaran.