அரிசிக்கு 20% ஏற்றுமதி வரி: இன்று முதல் அமல்; ஒன்றிய அரசு அதிரடி

3 hours ago 2

டெல்லி: மனிதனின் அடிப்படை தேவைகளில் உணவும் ஒன்று. அத்தகைய உணவு வகைகளில் அரிசி பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. இத்தகைய அரிசியை, உலக நாடுகளில் பல நாடுகள் உணவுக்காக பயன்படுத்தி வருகின்றன. அரிசியில் பல வகைகள் உள்ளன. இதில் புழுங்கல் அரிசி, பச்சரிசி, சிகப்பரிசி, பாசுமதி அரிசி உள்ளிட்டவை மக்களின் அதிகளவு நுகர்வு தேவையாக உள்ளது. உலகளவில் அதிகளவில் அரிசியை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. இந்நிலையில்தான் ஒன்றிய அரசு, பாசுமதி அல்லாத புழுங்கல் அரிசி மீதான ஏற்றுமதி வரியை 20% ஆக நிர்ணயித்துள்ளது.

இந்த வரி விதிப்பின் மூலம், அரிசி ஏற்றுமதியானது விலை உயர்ந்து, பிற நாடுகளுக்கான ஏற்றுமதி செய்வது குறையும். அரிசி ஏற்றுமதி குறைவதால் உள்நாட்டு சந்தையில் அரிசி விலை கட்டுக்குள் இருக்கும் என்றும், போதுமான அரிசி இருப்பு இருக்கும் என்றும் ஒன்றிய அரசு கருதுகிறது. உள்நாட்டு அரிசி விலையை கட்டுக்குள் வைத்தல் மற்றும் போதுமான இருப்பு வைத்தல் என்பது ஒன்றிய அரசின் நோக்கமாகும். இந்த ஏற்றுமதி வரி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

The post அரிசிக்கு 20% ஏற்றுமதி வரி: இன்று முதல் அமல்; ஒன்றிய அரசு அதிரடி appeared first on Dinakaran.

Read Entire Article