கரூர்: 100 நாள் வேலை தொழிலாளர்களுக்கு 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என கரூர் எம்.பி. செ.ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளார்.
கரூர் அருகேயுள்ள அப்பிபாளையம் ஊராட்சி தேத்தம்பட்டியில் இன்று (மே 1ம் தேதி) கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கரூர் எம்.பி. செ.ஜோதிமணி செய்தியாளர்களிடம் கூறியது: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென காங்கிரஸ் தொடர்ந்து போராடியது.