மதுரை, ஜன. 23: மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து அழகர்கோயிலுக்கு தாழ்தள சொகுசு அரசு டவுன் பஸ் நேற்று சென்று கொண்டிருந்தது. மதுரையில் உள்ள கோ.புதூர் பகுதியை கடந்து கொடிக்குளம் அருகே அந்த பஸ் சென்ற போது மர்ம நபர் ஒருவர் அதன் மீது கல் வீசினார். இதில் பஸ்ஸின் முன்புற கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். முடிவில் கண்ணாடியை உடைத்ததாக கோ.புதூரை சேர்ந்த காதர்மைதீன் மகன் அபுபக்கர்சித்திக்(29) என்பவரை கைது செய்தனர்.
The post அரசு பஸ் கண்ணாடி உடைத்தவர் கைது appeared first on Dinakaran.