திருப்புத்தூர், பிப். 8: தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் நேற்று தொடங்கி பிப்.14ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து பள்ளிகளிலும் செய்முறை தேர்விற்கு ஆய்வகப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று திருப்புத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வேதியல் பாடப்பிரிவு ஆய்வகத் தேர்வில் திருப்புத்தூர் மற்றும் சுற்றியுள்ள பள்ளிகளைச் சேர்ந்த 125 மாணவர்கள் கலந்து கொண்டனர். ஒரு சுற்றுக்கு 30 பேர் விதம் செய்முறை தேர்வில் இடம் பெற்றனர். புறத்தேர்வாளர், அகத்தேர்வாளர் முன்னிலையில் தேர்வு நடைபெற்றது.
The post அரசு பள்ளியில் பிளஸ் 2 அரசு செய்முறை தேர்வு appeared first on Dinakaran.