அரக்கோணம்: தொழிற்சாலை முன் தடையை மீறி போராட்டம் நடத்த ஏற்பாடு செய்த அரக்கோணம் அதிமுக எம்.எல்.ஏ. ரவி கைது செய்யப்பட்டுள்ளார். பல்வேறு கோரிக்கைகளுக்காக எம்.ஆர்.எப். தொழிற்சாலை முன் போராட்டம் நடத்த அண்ணா தொழிற்சங்கம் ஏற்பாடு செய்தது. ஆலை முன்பாக போராட்டம் நடத்த எம்.ஆர்.எப். நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடையாணை பெற்றது. அதிமுக எம்.எல்.ஏ. ரவி, முன்னாள் எம்.பி. ஹரி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
The post அரக்கோணம் அதிமுக எம்.எல்.ஏ. கைது appeared first on Dinakaran.