அமைச்சரின் பாதுகாப்பு போலீஸார் தாக்குதல்: காவல் நிலையத்துக்குள் வழக்கறிஞர்கள் போராட்டம்

3 months ago 16

அமைச்சரின் பாதுகாப்பு போலீஸார் வழக்கறிஞரை தாக்கியதை கண்டித்து, திண்டுக்கல்லில் காவல் நிலையத்துக்குள் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் அமைச்சர் ஐ.பெரியசாமியை சந்திக்க சென்ற வழக்கறிஞர் உதயகுமாரை, அமைச்சரின் பாதுகாப்பு போலீஸார் மற்றும் கட்சியினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்து வழக்கறிஞர்கள் நேற்று முன்தினம் இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நநலையில், நேற்று காலை திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய வரவேற்புப் பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், காவல் நிலையத்துக்கு உள்ளேயே சென்று போராட்டம் நடத்தினர்.

Read Entire Article