அமைச்சர்களை விட பல நேரங்களில் அவர்களது உதவியாளர்கள் தான் ஏடாகூடமாக எதையாவது செய்து கெட்ட பெயரைச் சம்பாதிப்பார்கள். செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் உதவியாளர் வினோத்குமாரும் அப்படித்தான் ஒரு சிக்கலில் மாட்டி இருக்கிறார்!
கடந்த ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி, திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகேயுள்ள இடையன் கிணறு கிராமத்தில் நம்பர் பிளேட் இல்லாத லாரியில் ஒரு கும்பல் கிராவல் மண் கடத்தியது. விஷயமறிந்து ஸ்பாட்டுக்கு வந்த மாவட்ட கனிமவளத்துறை சிறப்பு ஆய்வாளரான சிவசக்தி, அந்தக் கும்பலை பிடித்து விசாரணை நடத்தினார்.