அனுமதியின்றி தயாரித்த பட்டாசுகள் பறிமுதல்

1 month ago 8

ஏழாயிரம்பண்ணை, பிப்.10: ஏழாயிரம்பண்ணை அருகே அன்பின் நகரம் பகுதியில் ஏழாயிரம்பண்ணை காவல்நிலைய சார்பு ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் உள்ள சார்லஸ்(58) என்பவர் வீட்டின் அருகில் உள்ள தகர செட்டை சோதனை செய்தனர். அதில் திரி பொருத்தப்பட்டு மருந்து செலுத்தப்படாமல் முழுமையடையாத வாண வெடி குழாய்கள் தயாரித்து வைத்திருந்தது தெரியவந்தது. பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார் சார்லஸை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அனுமதியின்றி தயாரித்த பட்டாசுகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article