அந்நிய செலாவணி முறைகடு: ராமேசுவரம் நட்சத்திர விடுதியை கையகப்படுத்தி அமலாக்கத் துறை நடவடிக்கை

22 hours ago 2

ராமேசுவரம்: அந்நிய செலாவணி முறைகேட்டில், ராமேசுவரத்தில் அக்னி தீர்த்தம் கடற்கரை அருகே 60 அறைகளுடன் செயல்பட்டு வந்த நட்சத்திர விடுதி மற்றும் நிலத்தையும் கையகப்படுத்தி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

மேற்கு வங்கத்தில் டிபி குளோபல் பிக்ஸ் என்ற பெயரில் அந்நிய செலாவணி வர்த்தக நிறுவனம் துவங்கி, வர்த்தக முதலீடுகளில் அதிக வருமானம் தருவதாக பொது மக்களிடம் முதலீடுகளை பெற்று மோசடியில் ஈடுபட்டதாக கொல்கத்தா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், இந்திய ரிசர்வ் வங்கியிடம் டிபி குளோபல் பிக்ஸ் நிறுவனம் அந்நிய செலாவணி வர்த்தகத்துக்கு எந்த அங்கீகாரமும் பெறவில்லை என்பது தெரியவந்தது.

Read Entire Article