அத்திப்பட்டு அனல் மின்நிலையத்தில் மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

5 months ago 31

பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், 2வது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் 2வது நிலையின் 2வது அலகில் ஏற்கனவே 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கொதிகலன் கசிவை சரிசெய்யும் பணிகளில் மின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

The post அத்திப்பட்டு அனல் மின்நிலையத்தில் மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article