அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

1 week ago 3

சென்னை: அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. எடப்பாடி கோரிக்கையை ஏற்று அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து ஆணையம் விசாரிக்க தடை விதிக்கப்பட்டது. தேர்தல் ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதிமுக உள்கட்சி விவகாரம் குறித்து விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி மனுத் தாக்கல் செய்தார். எடப்பாடி பழனிசாமி மனுவை விசாரித்த ஐகோர்ட், தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. தேர்தல் ஆணையம் விசாரிக்க விதித்த தடையை நீக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என ஐகோர்ட் உத்தரவிட்டது.

The post அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article