அண்ணா நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

3 hours ago 1

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 56-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க.வினரின் அமைதி பேரணி நடைபெற்றது. அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடைந்தது.

இந்த பேரணியில் துணை முதல்-அமைச்சர் உள்ளிட்ட திமுகவின் இந்நாள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள், அனைத்து அணியினரும் இந்த அஞ்சலிக் கூட்டத்தில் பங்கேற்றனர்

இந்நிலையில் அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். முன்னதாக மெரினாவில் கலைஞர் கருணாநிதி நினைவிடத்திலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செய்தார்.

Read Entire Article