திருத்துறைப்பூண்டி, ஜன. 25: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கச்சனம், அம்மனூர், விளத்தூர் ஆகிய கிராமங்களுக்கு மாவட்ட ஆட்சியரின் மக்கள் நேர்காணல் முகாம் அடுத்த மாதம் 12ம் தேதி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
இதற்கான மனுக்கள் நேற்று 24ம் தேதி தனி துணை ஆட்சியர் தையல் நாயகி தலைமையில் மனுக்கள் பெறப்பட்டது. இதில் வட்டாட்சியர் குருமூர்த்தி, தனி வட்டாட்சியர் கிருஷ்ணகுமார், துணை வட்டாட்சியர் சங்கர், வருவாய் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி, விஏஓக்கள் குமார், கோகிலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post அடுத்த மாதம் நடைபெறும் நேர்காணல் முகாமிற்கு மனுக்கள் வருகை appeared first on Dinakaran.