திருப்புவனம்: “மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை அடித்தே கொலை செய்த தனிப்படை போலீஸார் ஒரு சதவீத குற்ற உணர்ச்சிகூட இன்றி சட்டத்தை மீறி மிருகத்தனமாக செயல்பட்டுள்ளனர்” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி வேதனை தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மடப்புரத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி, தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட அஜித்குமார் குடும்பத்தினரை சந்தித்து ரூ.1 லட்சம் நிதி உதவி அளித்து ஆறுதல் கூறினார். அப்போது பூமிநாதன் எம்எல்ஏ உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.