சென்னை: உயரம் குறைந்த மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்க சிறப்பு அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு உயரம் குறைந்தவர்கள் நலச் சங்கத்தினர் சென்னையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்குவது போல, உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்க சிறப்பு அரசாணை வெளியிட வேண்டும்; வேலைவாய்ப்பில் உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்; அரசு வேலைவாய்ப்பில் குரூப்-4க்கும் குறைவாக உள்ள வேலை வாய்ப்புக்கான மின்தூக்கி இயக்குபவர், அலுவலக உதவியாளர்கள், அங்கன்வாடி பணிகள், சத்துணவு பணியாளர்கள், ரேஷன் கடை ஆகிய பணியிடங்களில் உயரம் குறைந்த மாற்றத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து சிறப்பு அரசாணை வெளியிட வேண்டும்.