7 தொகுதி இடைத்தேர்தல் ராஜஸ்தானில் ரூ.92 கோடி ரொக்கம், மதுபானம் பறிமுதல்

2 months ago 12

ஜெய்பூர்: ராஜஸ்தானில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ரூ.92 கோடி மதிப்பிலான ரொக்கப் பணம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜூன்ஜூனு, தவுசா, தியோலி – உனியாரா, கின்வ்சார், சவுராசி, சலூம்பர் மற்றும் ராம்கர் ஆகிய ஏழு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தல் முடிவுகள் 23ம் தேதி வௌியிடப்படும். இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த அக்டோபர் 15ம் தேதி முதல் நவம்பர் 8ம் தேதி வரை ரூ.92.68 கோடி மதிப்பிலான ரொக்கப் பணம், இலவச பரிசு பொருள்கள், சட்டவிரோத மதுபானங்கள் உள்ளிட்டவற்றை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

The post 7 தொகுதி இடைத்தேர்தல் ராஜஸ்தானில் ரூ.92 கோடி ரொக்கம், மதுபானம் பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article