4 ஆண்டுகளுக்கு பிறகு எல்லையில் நடந்த மாற்றம் : இந்தியா – சீனா ராணுவ படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கை நிறைவு!!

3 months ago 13

டெல்லி : இந்தியா – சீனா எல்லையில் படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கை நிறைவடைந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்டை நாடான சீனாவின் ராணுவம் கிழக்கு லடாக் பகுதிக்குள் கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் நுழைய முயன்றது. இதனால் இரு நாட்டு வீரர்களும் மோதிக் கொண்டனர். இதன் காரணமாக எல்லையில் இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டன.

இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக நடந்த பலச் சுற்று பேச்சுவார்த்தைக்கு பின் சமீபத்தில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, எல்லையில் இருந்து படைகளை விளக்கி கொள்ளும் நடவடிக்கைகள் தொடங்கின.
இந்த நடவடிக்கை தற்போது முடிவடைந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

எல்லையில் அமைக்கப்பட்ட தற்காலிக மற்றும் நிரந்தர கட்டமைப்புகள் அகற்றப்பட்ட போது, இரு நாட்டு ராணுவமும் ஆய்வு செய்ததாகவும் ராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான முறையான அறிவிப்பு வந்த பின்பு 2020 மே மாதத்திற்கு முன்பு இருந்தது போல், எல்லையில் ரோந்து பணிகளில் ராணுவம் மீண்டும் ஈடுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post 4 ஆண்டுகளுக்கு பிறகு எல்லையில் நடந்த மாற்றம் : இந்தியா – சீனா ராணுவ படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கை நிறைவு!! appeared first on Dinakaran.

Read Entire Article