₹32 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

4 months ago 12

ராசிபுரம், ஜன.7: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கவுண்டம்பாளைய கிளையில், பருத்தி ஏலம் நேற்று நடைபெற்றது. இதில் ராசிபுரம், சிங்களாந்தபுரம், காக்காவேரி, குருசாமிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, விவசாயிகள் 1280 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் ஆர்சி ஆர்சிஎச் அதிகபட்சம் குவிண்டால் ₹8,069க்கும், குறைந்தபட்சம் ₹7,019க்கும் விற்பனையானது. டிசிஎச் ரக பருத்தி அதிகபட்சம் ₹10,270க்கும், குறைந்தபட்சம் ₹10,169க்கும், கொட்டு ரகம் அதிகபட்சம் ₹5099க்கும், குறைந்தபட்சம் ₹4,300க்கும் விற்பனையானது. நேற்று நடந்த ஏலத்தில் ₹32 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது. ஏலம் எடுக்க சேலம், திருச்செங்கோடு, ஆத்தூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்.

The post ₹32 லட்சத்திற்கு பருத்தி ஏலம் appeared first on Dinakaran.

Read Entire Article