
மான்செஸ்டர்,
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில், ஏற்கனவே நடைபெற்ற 3 டி20 ஆட்டங்களில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 4வது டி20 போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் சோபியா அதிகபட்சமாக 22 ரன்கள் சேர்த்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரீ சரணி, ராதா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து, 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கி விளையாடி வருகிறது.