5 நாடுகள் பயணம் நிறைவு: நமீபியாவில் இருந்து இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி

3 hours ago 1

விண்ட்ஹோக்,

பிரதமர் மோடி கானா, டிரினிடாட் அண்டு டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

கடந்த 2ம் தேதி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கானா சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு அதிபரை சந்தித்தார். பிரதமர் மோடிக்கு கானாவின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து டிரினிடாட் அண்டு டொபாகோ, அர்ஜென்டினா ஆகிய நாடுகளுக்கும் பிரதமர் மோடி சென்றார். டிரினிடாட் அண்டு டொபாகோ நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பிரேசில் சென்ற பிரதமர் மோடி பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்டார். பிரதமர் மோடிக்கு பிரேசிலின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதையடுத்து, நமீபியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் நமீபிய அதிபரை சந்தித்தார். பின்னர், நமீபியாவின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இந்நிலையில், 5 நாடுகள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி நமீபியாவில் இருந்து நேற்று இந்தியா புறப்பட்டார். அவர் இன்று காலை இந்தியா வந்தடைகிறார். கடந்த 8 நாட்களில் 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி பயணத்தை நிறைவு செய்து இன்று இந்தியா வருகிறார். அவருக்கு வரவேற்பு அளிக்க அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். 

Read Entire Article