தஞ்சாவூர்: 100 நாள் வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் முடிந்த பணிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.4,034 கோடியை உடனே மத்திய அரசு விடுவிக்க வேண்டும். இல்லா விட்டால், உயர், உச்ச நீதிமன்றங்களில் வழக்கு தொடர விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
கிராமப்புற பொருளாதார மேம்பாட்டுக்காக, கிராமங்களில் அனைத்து வகையான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக 100 நாள் வேலை உறுதி சட்டம் 2005ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ் தற்போது வரை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நாள்தோறும் ரூ.319 கூலியாக வழங்கப்படுகிறது. பணி நாட்களில், அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் அலுவலர்கள், தொழிலாளர்களுடன் பணி செய்யும் பகுதியைப் புகைப்படம் எடுத்து, ஆட்சியர், மத்திய, மாநில அரசுகளுக்கு அவ்வப்போது அனுப்பி, வேலைக்கான பணியை உறுதி செய்து வருகின்றனர்.