காரிமங்கலம், பிப்.5: காரிமங்கலம் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடந்து வருகிறது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், தங்களது கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில், சுமார் 750 ஆடுகள், 500 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் ₹70 லட்சத்திற்கு ஆடுகளும், ₹45 லட்சத்திற்கு மாடுகளும் விற்பனையானது. நாட்டுக்கோழிகள் ₹5 லட்சத்திற்கு விற்பனையானது. ஆக மொத்தம் நேற்றைய சந்தையில் ₹1.20 கோடிக்கு வர்த்தகம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோயில் திருவிழாக்கள் நடந்து வருவதால், ஆடுகள் விற்பனை அதிகரித்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
The post ₹1.20 கோடிக்கு கால்நடைகள் விற்பனை appeared first on Dinakaran.