ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை மறுநாள் ஜேஷ்டாபிஷேகம்

8 hours ago 4

ஸ்ரீரங்கம்,

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மூலவர் பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனால் அன்று முழுவதும் மூலஸ்தானத்தில் பெருமாளை தரிசனம் செய்ய இயலாது. மறுநாள் 9-ந் தேதி (புதன்கிழமை) திருப்பாவாடை சேவையை முன்னிட்டு மாலை 3 மணிக்கு மேல் மூலஸ்தானத்தில் பெருமாளை தரிசனம் செய்யலாம்.

மேலும் மூலவர் பெருமாளுக்கு தைலக்காப்பு சாற்றப்பட்டுள்ளதால் அது உலரும் வரை மூலவர் பெருமாளின் திருமுகத்தை மட்டுமே தரிசிக்க இயலும் என்று கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் தெரிவித்துள்ளார். 

Read Entire Article