ஷாருக்கான் வீட்டு வாசலில் 95 நாட்கள் காத்திருந்த ரசிகர்

6 months ago 16

மும்பை பாந்த்ரா கடற்கரை அருகிலுள்ள மன்னத் பங்களாவில் ஷாருக்கான் வசிக்கிறார். சமீபத்தில் அவர் 59வது பிறந்த நாளை கொண்டாடினார். ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாளன்று தனது வீட்டு பால்கனியில் நின்று ரசிகர்களை ஷாருக்கான் சந்திப்பது வழக்கம். இந்த ஆண்டு அவ்வாறு சந்திக்கவில்லை. இந்நிலையில், ஷாருக்கானைப் பார்க்க அவரது ரசிகர் ஷேக் மொகமத் அன்சாரி என்பவர், ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து வந்து, கடந்த 95 நாட்களாக ஷாருக்கான் வீட்டுக்கு வெளியில் காத்திருந்தார்.

எனினும் அவரால் ஒருமுறை கூட ஷாருக்கானை நேரில் பார்க்க முடியவில்லை. ஆனால், திடீரென்று அந்த ரசிகரை ஷாருக்கான் சந்தித்தது மட்டுமின்றி, அவருடன் போட்டோவும் எடுத்துக்கொண்டார். இதுகுறித்து ரசிகர் கூறுகையில், ‘எனக்கு ஷாருக்கானை மிகவும் பிடிக்கும். அவரைச் சந்திக்க வேண்டும் என்பதற்காகவே எனது கம்ப்யூட்டர் சென்டரை மூடிவிட்டு வந்தேன். எனது நீண்ட நாள் எதிர்பார்ப்பு இப்போது நிறைவேறியுள்ளது’ என்றார். ஷாருக்கான் பிறந்தநாளுக்கு ஏற்பாடு செய்திருந்த சிறப்பு ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சியில், அந்த ரசிகர் ஷாருக்கானை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

The post ஷாருக்கான் வீட்டு வாசலில் 95 நாட்கள் காத்திருந்த ரசிகர் appeared first on Dinakaran.

Read Entire Article