மதுரை: வைகை நதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மதுரை உட்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த நாகராஜன், உயர்நீதிமன்றம் மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: வைகை ஆறு தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உற்பத்தியாகி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் வழியாக சென்று கடலில் கலக்கிறது.