‘வழக்கு விசாரணைக்கு ஆஜராக விலக்கு அளிக்க முடியாது. தொடர்ந்து நீதிமன்ற படியேறினால்தான் சீமானுக்கு நிதானம் வரும்’ என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இனத் துரோகி என்றும், தேசத் துரோகி என்றும் பேசி வன்முறையைத் தூண்டியதாக கஞ்சனூர் போலீஸில் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.