சென்னை: தமிழகத்தில் 2024 - 25 ஆம் ஆண்டில் வேளாண்துறையின் ஆண்டு வளர்ச்சி 0.15% ஆக வீழ்ச்சியந்துள்ளது.60 சதவீதம் மக்களின் பங்களிப்பு வெறும் 10 சதவீதம் தான் என்றால் விவசாயிகள் எவ்வாறு முன்னேற முடியும் என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின் பொருளாதாரம் 2024 - 25 ஆம் ஆண்டில் 9.69 சதவீதம் வளர்ச்சியடைந்திருக்கிறது. இது மகிழ்ச்சியும், மன நிறைவும் அளிக்கக்கூடியது தான் என்றாலும், வேளாண்துறையின் வளர்ச்சி வெறும் 0.15 சதவீதமாக குறைந்திருப்பது மிகவும் கவலையளிக்கிறது. அடிப்படையில் வேளாண்மையை சார்ந்த மாநிலமான தமிழகம், விவசாயிகள் முன்னேறாமல் மாநிலம் முன்னேற முடியாது என்ற உண்மையை அறிந்திருந்தும் வேளாண் வளர்ச்சிக்காக முன்னோக்கு நடவடிக்கைகளை தமிழக அரசு இதுவரை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது.