சட்டப்பேரவை வேளாண் பட்ஜெட், மின்சாரம், சுகாதாரத்துறை குறித்து அதிமுக உறுப்பினர், அமைச்சர்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. விவாதத்தை தொடங்கி வைத்து அதிமுக உறுப்பினர் ஏ.பி.ஜெயசங்கரன் பேசுகையில், ‘‘5-வது முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை. எந்த புதிய திட்டங்கள், விவசாயம் செழிக்கவோ, விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்படவும் எதுவும் வேளாண் பட்ஜெட்டில் இல்லை’’ என்றார்.