வேதாரண்யம் அருகே கஞ்சா வைத்திருந்த மூன்று பேர் கைது

2 months ago 11

 

வேதாரண்யம்,டிச.18: வேதாரண்யம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் கடந்த இரண்டு நாட்களுக்கு கடற்கரையில் இரண்டு பொட்டலங்கள் கரை ஒதுங்கியது. இதனை வேதாரண்யம் தாலுகா சிறுத்தலைக்காடு பகுதி சேர்ந்த அண்ணமலை (19), ரமேஷ் (19), ராமு (19), ஆகிய மூன்று பேரும் எடுத்து காயவைத்து அதனை விற்பனை செய்ய முயற்சி செய்து உள்ளனர். தகவலறிந்து வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு கிலோ 250 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வேதாரண்யம் அருகே கஞ்சா வைத்திருந்த மூன்று பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article