வெள்ளிச்சந்தை அருகே சிறுமி திடீர் சாவு

2 months ago 8

குளச்சல், டிச.3: வெள்ளிச்சந்தை அருகே சிறுமியின் சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வெள்ளிச்சந்தை அருகே உள்ள சரல் உன்னங்குளம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (47). இவருடைய 2வது மகளான 12 வயது சிறுமிக்கு மனநலம் சற்று பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு காய்ச்சல், சளி தொல்லையால் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சிறுமியை நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து ராதாகிருஷ்ணன் வெள்ளிச்சந்தை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிந்து சிறுமியின் திடீர் சாவு குறித்து விசாரித்து வருகின்றனர்.

The post வெள்ளிச்சந்தை அருகே சிறுமி திடீர் சாவு appeared first on Dinakaran.

Read Entire Article