வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட முதியவர்

2 months ago 9

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் அருகே ராமஞ்சேரி ஈன்ற பேட்டை பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளத்தில் குப்பத்துபாளையம் கிராமத்தைச் சார்ந்த லட்சுமய்யா(65) என்பவர் நேற்று முன்தினம் மாலை ஆற்றைக் கடக்க முற்பட்ட போது எதிர்பாராத விதமாக வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டார். கனகம்மாசத்திரம் போலீசார் மற்றும் திருவள்ளூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட முதியவரை நேற்று காலை முதல் மாலை வரை தொடர்ந்து தேடினர். இருப்பினும் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட முதியவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில் இன்று தேடுதல் வேட்டை தொடரும் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

The post வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட முதியவர் appeared first on Dinakaran.

Read Entire Article