
திருக்கணித பஞ்சாங்கப்படி நேற்று இரவு 7.58 மணிக்கு ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியடைந்தனர். இதையொட்டி வெள்ளக்கோவில் எல்.கே.சி நகரில் உள்ள புற்றுக்கண் ஆனந்த விநாயகர் கோவில் சன்னதியில் ராகு கேது பெயர்ச்சி யாகவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.