வெளியேற்றுதல் சுற்று; பல்வேறு சாதனைகளை குவித்த ரோகித் சர்மா

1 day ago 4

முல்லன்பூர்,

ஐ.பி.எல். தொடரில் முல்லன்பூரில் இன்று நடைபெற்று வரும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற மும்பை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 228 ரன்கள் குவித்தது.

மும்பை தரப்பில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 81 ரன்கள் எடுத்தார். குஜராத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 229 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி ஆடி வருகிறது. இந்நிலையில், இந்த போட்டியில் அதிரடியாக ஆடி அரைசதம் விளாசிய ரோகித் சர்மா பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

அதாவது, இந்த போட்டியில் 2 சிக்சர்கள் அடித்ததன் மூலம் ஐ.பி.எல். தொடரில் 300 சிக்சர்கள் விளாசிய முதல் இந்திய வீரர் (மொத்தமாக 2வது வீரர்) என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த பட்டியலில் கிறிஸ் கெயில் 357 சிக்சர்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.

இதையடுத்து ஐ.பி.எல். தொடரில் 7000 ரன்களை கடந்த 2வது வீரர் என்ற சாதனையையும் ரோகித் சர்மா படைத்துள்ளார். முதல் இடத்தில் விராட் கோலி (8618 ரன்) உள்ளார். 

Read Entire Article