“வெயிலின் தாக்கத்தை கூட்ட நெரிசலில் உயிரிழந்ததாக கதை கட்ட இபிஎஸ் முயல்கிறார்” - அமைச்சர் சிவசங்கர்

1 hour ago 2

சென்னை: “விமான சாகச நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் யார் என்பதை எடப்பாடி பழனிசாமி அறிவாரா? என்பதை முதலில் அறிவிக்க வேண்டும். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்ததாக புதிதாக கதை கட்ட முயல்கிறார் எடப்பாடி பழனிசாமி” என்று போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: “அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின் பேரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. சொத்து வரி என்பது முதன் முதலில் அதிமுக ஆட்சியில்தான் உயர்த்தப்பட்டது என்பதை அவருக்கு நினைவுபடுத்த கடமைப்பட்டிருக்கிறேன். 2018 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோது , குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களுக்கான சொத்து வரியை 50 முதல் 100 சதவிகிதம் வரை உயர்த்தினார்கள்.அதில் 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், என அனைத்து பகுதிகளிலும் சொத்து வரி 1.04.2018 முதல் அமல்படுத்தப்பட்டது.

Read Entire Article