தேவையானவை:
புழுங்கல் அரிசி – அரை கிலோ,
உளுத்தம் பருப்பு – கால் கப்,
வெந்தயம் – கால் கப்,
நாட்டுச்சர்க்கரை – அரை கிலோ,
நல்லெண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
புழுங்கல் அரிசியை முதல்நாளே ஊறவைத்து நன்றாக மாவாக அரைக்கவும். உளுத்தம் பருப்பு, வெந்தயம் தனியாக அரைத்து அதனுடன் புழுங்கல் அரிசி மாவை சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்றாகக் கலக்கவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் நல்லெண்ணெயை ஊற்றி, கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி கரண்டியால் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். களி போல நன்றாகத் திரண்டு வரும் போது, அதில் நாட்டுச் சர்க்கரையை சேர்த்தால் சத்தான வெந்தயக் களி ரெடி.
The post வெந்தயக் களி appeared first on Dinakaran.