சென்னை: மருத்துவர்களின் பற்றாக்குறையை காரணம் காட்டி ஈட்டிய விடுப்பு வழங்க மறுப்பதற்கு அரசு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் ஜெ.ராஜமூர்த்தி, அனைத்து மாவட்ட நலப்பணிகள் இயக்குநர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் (டிஎம்எஸ்) கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் நலப்பணிகள் இணை இயக்குநர்கள், மருத்துவ பணிகள் துணை இயக்குநர்கள் (குடும்ப நலம்) மருத்துவ பணிகள் துணை இயக்குநர்கள் (காச நோய் மற்றும் தொழுநோய்), முதன்மை குடிமை மருத்துவர்கள் மற்றும் முதுநிலை குடிமை மருத்துவர்கள் சொந்த வேலை காரணமாக ஈட்டிய விடுப்பு முன்னனுமதி கோரும் விண்ணப்பங்கள் தற்சமயம் அதிகமாக வரப்பெறுகின்றன.