சென்னை: போக்குவரத்துக் கழகங்களின் ரூ.22 கோடி நிலுவையால் ஊழியர்களுக்கு கடன் வழங்க முடியாமல் சிரமத்தை சந்திப்பதாக போக்குவரத்துக் கழக பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கம் தெரிவித்துள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் உள்ளிட்ட கழகங்களைச் சார்ந்த பணியாளர்கள் சென்னையில் உள்ள பணியாளர்கள் கடன் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.