வெட்டுவெந்நியில் தொமுச கொடி அறுப்பு

2 weeks ago 2

மார்த்தாண்டம் , ஜன.23: குழித்துறை அரசு மருத்துவமனை முன்பு நகர தொமுச ஆம்புலன்ஸ் ஒட்டுனர் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கம் சார்பில் பொது நல சேவைகள் நடந்து வருகிறது. இந்த ஸ்டாண்டில் குழித்துறை நகர திமுக சார்பில் கொடி கம்பம் அமைக்கபட்டு தொமுச கொடி பறக்க விடப்பட்டிருந்தது. இந்த கொடியை நேற்று முன்தினம் விஷமிகள் யாரோ அறுத்து சென்றுள்ளனர். இது குறித்து குழித்துறை நகர திமுக செயலாளர் வினுகுமார், மாநில பேச்சாளர் வழக்கறிஞர் பிரவீன் மற்றும் நிர்வாகிகள் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி விடுகின்றனர்.

The post வெட்டுவெந்நியில் தொமுச கொடி அறுப்பு appeared first on Dinakaran.

Read Entire Article