
ரியாத்,
தலைநகர் டெல்லியில் இருந்து நேற்று ஏர் இந்தியா விமானம் இங்கிலாந்தின் பெர்மிங்கம் நகருக்கு புறப்பட்டது. விமானத்தில் 150க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.
விமானம் சவுதி அரேபியாவின் வான் பரப்பில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக டெல்லியில் உள்ள விமான கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம அழைப்பு மூலம் மிரட்டல் வந்தது.
இது குறித்து உடனடியாக விமானிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விமானம் சவுதி அரேபியாவின் ரியாத் விமான நிலையத்தில் அவரசமாக தரையிக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டு சோதனை நடைபெற்றது. சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மாற்று விமானம் மூலம் பயணிகள் பெர்மிங்கம் அனுப்பி வைக்கப்பட்டனர்.