
சென்னை,
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் வாட்டி வந்த நிலையில் இன்று இரவு 9.30 மணியில் இருந்து திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
இதனால் அடையாறு, மந்தைவெளி, பட்டினப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.