வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் பெற டிச.15-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு

4 months ago 15

சென்னை: தமிழக அரசின் வீர தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம் பெற விரும்புவோர் டிச.15-ம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் பொதுத்துறை இன்று (அக்.24) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வீர, தீரச் செயல்களுக்கான ‘அண்ணா பதக்கம்’ ஆண்டுதோறும் முதல்வரால் குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. வீர தீரச் செயல் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே இப்பதக்கத்தைப் பெறத் தகுதியுடையவராவர். பொதுமக்களில் மூவருக்கும், சீருடை பணியாளர்கள் உட்பட அரசு ஊழியர்களில் மூவருக்கும் இப்பதக்கங்கள் வழங்கப்படும்.

Read Entire Article