தர்மபுரி, ஜன.25: தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை சேசன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் குப்பன்(43). தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் டேங்கர் லாரியில் பயன்படுத்தக் கூடிய இரும்பு வால்வை வைத்திருந்தார். நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து, இரும்பு வால்வை திருடினார். இதை பார்த்த குப்பன் திருடன் என சத்தம்போட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து. தப்பியோட முயற்சித்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை அதியமான்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் தர்மபுரி குப்பூர் பகுதியை சேர்ந்த வடிவேல் மகன் கோவிந்தசாமி (21) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post வீடுபுகுந்து திருட முயன்ற வாலிபர் சிக்கினார் appeared first on Dinakaran.