வீடு கட்டித்தருவதாக 1700 பேரிடம் ரூ.400 கோடி மோசடி: ரூ.44 கோடி சொத்துக்கள் முடக்கம்

2 days ago 3

புதுடெல்லி: மகாராஷ்டிரா மும்பையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று நவிமும்பையின் தலோஜா பகுதியில் வீடுகள் கட்டி தருவதாக மொத்தம் 1700 வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ. 400 கோடி பெற்றனர். ஆனால் வீட்டை கட்டித்தராமலும், பணத்தை திருப்பி தராமலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி கட்டுமான நிறுவன அதிபர் லலித் தேக்சந்தானி என்பவரை கடந்த ஆண்டு மார்ச் மாதம் கைது செய்தனர்.

இவர் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்ற பணத்தை தனது சொந்த செலவினங்களுக்கும், மற்றும் சொத்துக்கள் வாங்கியது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து அவருக்கு சொந்தமான ரூ. 158 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். தற்போது தேக்சந்தானி மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சொந்தமான துபாயில் உள்ள வீடு, மும்பை மற்றும் புனேயில் உள்ள ரூ. 44 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது

அரியானாவில் தனியார் மால் பறிமுதல்
அரியானா மாநிலம் சோனிபட்டில் டிடிஐ இன்ப்ராஸ்டரக்சர் என்ற கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான வணிக வளாகம்(மால்) ஒன்று குண்ட்லி ஜிடி சாலையில் உள்ளது. பணமோசடி புகாரில் அமலாக்கத்துறையினர் டிடிஐ இன்ப்ராஸ்டரக்சர் நிறுவனத்தின் மால் உள்பட ரூ.5.61 கோடிக்கும் அதிகமான அசையா சொத்துகளை பறிமுதல் செய்துள்ளது.

The post வீடு கட்டித்தருவதாக 1700 பேரிடம் ரூ.400 கோடி மோசடி: ரூ.44 கோடி சொத்துக்கள் முடக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article