புதுச்சேரி: சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவருக்கும், அவருக்கு தங்க கர்நாடகா எஸ்டேட்டில் தனது வீட்டை அளித்தவருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி அருகேயுள்ள தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள பேக்கரியில் பணிபுரிந்தவர் ராஜேஷ் (25). புதுச்சேரியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் டியூசன் செல்லும் போது ராஜேஷுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ராஜேஷ் கூறியுள்ளார். அதன்படி, அவர் சிறுமியை வெளிமாநிலத்துக்கு கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி தரப்பில் புதுச்சேரி மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி போலீஸார் போக்சோ சட்டப் பிரிவில் வழக்குப் பதிந்து ராஜேஷை கைது செய்தனர்.