சென்னை: மதுரையில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக விவசாயிகள் நடத்திய பேரணிக்கு காவல் துறை அனுமதி மறுத்ததற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சார்பில் நடைபெற்ற பேரணிக்கு அனுமதி மறுத்த காவல் துறைக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். அடிப்படை ஜனநாயக உரிமையான போராட்டம் நடத்த அனுமதி மறுப்பதும், மீறி போராடி
னால் காவல் துறையைக் கொண்டு அடக்குமுறையை கையாள்வதும் ஏற்கத்தக்கதல்ல” என்று தெரிவித்துள்ளார்.