விவசாயிகள் குறைதீர் கூட்டம்: 20ம் தேதி நடக்கிறது

6 months ago 17

 

ஈரோடு, நவ. 12: ஈரோடு மீனாட்சி சுந்தரனார் சாலையில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருகிற 20ம் தேதி காலை 11 மணிக்கு கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் ரவி தலைமையில் நடைபெற உள்ளது. இந்த முகாமில், ஈரோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி தாலுகா பகுதியை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று தங்களது விவசாய நிலங்களை நில அளவைத்துறை மூலம் அளவீடு செய்தல்,விவசாய நிலங்கள்,பாதைகள்,ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றுதல் போன்ற கோரிக்கை தொடர்பாக மனு அளித்து பயன்பெறலாம் என ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் ரவி தெரிவித்துள்ளார்.

The post விவசாயிகள் குறைதீர் கூட்டம்: 20ம் தேதி நடக்கிறது appeared first on Dinakaran.

Read Entire Article