விவசாயிகள் உள்ளிட்டோருக்கு ரூ.9.5 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு: தமிழக பட்ஜெட் 2025-ல் அறிவிப்பு

3 hours ago 2

வேளாண்மை, சிறு, குறு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக்குழு, கல்வி ஆகிய துறைகளுக்கு வங்கிகள் கடன் வழங்க ரூ.9.5 லட்சம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் அரவிந்த் பனகாரியா தலைமையில் 16-ம் நிதி ஆணையம் தமிழகத்துக்கு வருகைதந்த போது நமது அரசு வலுவான கோரிக்கைகளை தகுந்த தரவுகளோடு முன்வைத்தது. அவற்றில், மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வை 50 சதவீதமாக அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மாநிலத்தின் பரவலான வளர்ச்சிக்கு வலுவான கடன் பொருளாதாரம் இன்றியமையாததாகும். இதை உணர்ந்து வேளாண்மை, சிறு, குறு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக்குழு, கல்வி ஆகிய துறைகளுக்கு கடன் வழங்கும் வங்கிகளுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு வரும் நிதியாண்டுக்கென ரூ.9.5 லட்சம் கோடி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 17.47 சதவீதம் அதிகமாகும். ரிசர்வ் வங்கியின் புத்தாக்க மையத்துடன் இணைந்து, வங்கிகள் கடன் வழங்கும் விதிகளை எளிமைப்படுத்திடும் வகையில் ஒருங்கிணைந்த கடன் வழங்கும் அமைப்பு (Unified Lending Interface) தொழில்நுட்பத்தை பல்வேறு வங்கிகள் மூலம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதன்மூலம் விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள், சிறு மற்றும் குறு தொழில்முனைவோர்கள் என அனைவருக்கும் விண்ணப்பித்த குறுகிய காலத்தில் கடன் வழங்கப்படும்.

Read Entire Article