புதுச்சேரி: விழுப்புரம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் டோல்கேட் கட்டணம் வசூலிப்பு இன்று (பிப்.24) துவங்கியது. டோல்கேட் மேற்கூரை இல்லாமல் அவசர அவசரமாக கட்டணம் வசூலிக்க திறக்கப்பட்டதாக கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம், புதுவை வழியாக நாகப்பட்டினத்துக்கு 194 கிமீ தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. கடந்த ஜனவரியில் விழுப்புரம் புதுச்சேரி இடையே உள்ள கெங்கராம்பாளையத்தில் சுங்க கட்டணம் வசூலிக்க அறிவிப்பு வெளியிடப்பட்து. ஆனால், பணிகள் முடிவடையாமல் கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு கிளம்பியதால் டோல்கேட் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது.